ஆனால், இன்றும் இந்த மருந்துகளை தயாரிக்க இந்தியா சீனாவை நம்பியுள்ளது. மருந்துகளை தயாரிப்பதற்கான ஏ.பி.ஐ (Active Pharmaceutical Ingredients (API)) என்ற மூலப்பொருளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.
கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக, அந்நாட்டுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஏ.பி.ஐ. இறக்குமதி செய்யப்படாததால், பல நிறுவனங்கள் மருந்து உற்பத்தியைக் குறைத்து வருகின்றன. இதன் விளைவுகள் உலகளாவிய மருந்துகளின் விநியோகத்தில் எதிரொலிக்கிறது.
- கொரோனா வைரஸ்: வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் பொது இடங்களுக்கு வருவதை தவிர்க்கிறாரா?
- கோழிக் கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா?
2018-19 ஆம் ஆண்டில் இந்திய அரசின் வணிகத் துறையால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 19.14 பில்லியன் டாலராக இருந்தது என்று இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கவுன்சில் (டி.பி.சி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்த மருந்துகளைத் தயாரிக்க ஏ.பி.ஐ (மூலப்பொருள்) சுமார் 85% சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏ.பி.ஐ உற்பத்தி மிகக் குறைவு என்பதோடு, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏ.பி.ஐ மூலப்பொருளை இறுதியான மருந்தாக தயாரிப்பதற்காக சில பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதாவது, இந்திய நிறுவனங்களும் மருந்துத் துறையில் சீனாவை நம்பியுள்ளன